Sunday, August 26, 2012

ஆகஸ்ட் 31 - ஏன்? ...எதற்காக.....?


 
அன்பின் தோழமைகளே,

கோவை சிறையில் உள்ள 166 முஸ்லிம்கள் உட்பட தமிழகமெங்கும் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள பலநூறு முஸ்லீம் சிறைவாசிகளின் 10 வருடங்களுக்கும் மேற்பட்ட சிறை இருப்பையும், ஆதாரங்களற்ற முறையில் ராசிவ் காந்தி கொலை வழக்கில் இன்று தூக்கு தண்டனை விதிக்கப்ட்டிருக்கும் முருகன், பேரரிவாளன், சாந்தன் என தமிழ் சொந்தங்களும், இன்னும் தமிழக சிறைகலெங்கும் பல்லான்டு காலமாக விடுதலைக்கான முகாந்திரமே இல்லாமல் அடைபட்டு கிடக்கும் அனைத்து அப்பாவி சிறைவாசிகளின் நிலை நிச்சயமாக 21 ஆம் நூற்றாண்டு இந்திய சமூகத்தின் அவலமாக வரலாறு பதிவு செய்திருக்கின்றது.

நீதி நியாயம் ஜனநாயகம் சட்டத்தின் முன் அனைவரும் சமம், மதச்சார்பற்ற தன்மை, மனித உரிமை என்பதனை எல்லாம் கோட்பாடுகளாக கொண்ட ஒரு அரசமைப்பில் இருந்து நீண்ட நெடுங்காலமாக நீதி , நியாயம், இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள அனைத்து அடிப்படை உரிமைகளும் மறுக்கப்பட்டு விசாரணை என்ற பெயரில் இந்திய வரலாறு காணாத நீண்ட சிறை இருப்பில் உள்ள சிறுபான்மை சமுதாயத்தினருக்கும், மேற்கூறிய அப்பாவிகளுக்கும் நம்மாள் நீதி பெற்றுத்தர இயலவில்லை என்றால் அதனினும் ஒரு சமூக இழிவு வேறொன்று இருக்குமோ?

 இந்தியாவில் இதுவரை நடந்த வகுப்பு கலவரங்களில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது சிறுபான்மை சமுதாயமான இஸ்லாமிய சமுதாயமே. இதன் சொத்துக்கள் சூரையாடப்பட்டுள்ளன, இச்சமுதாயத்தின் பென்கள் கற்பழிக்கப்பட்டுள்ளார்கள், குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர், இன்னும் இச்மூகமே தண்டிக்கப்படும் விதமாய அக்கலவரங்களுக்கு காரனம் என குற்றம் சுமத்தப்பட்டு இந்தியாவெங்கும் சிறையிலும் அடைபட்டு கிடக்கின்றனர். இக்கலவரங்களுக்கு காரனமான சங்பரிவார கூட்டங்கள் ஒரு போதும் சிறையில் அடைக்கப்பட்டதுமில்லை, தண்டிக்கப்பட்டதுமில்லை இது தான் ஜனநாயக இந்தியா!! 

ஆயிரம் குற்றவாளிகள் தப்பலாம் ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது என்பதே நீதித்துறையின் தாரக மந்திரம். பல ஆன்டுகளாக யார் குற்றவாளிகள் என நிரூபிக்காமல் முஸ்லிம்களின் வழக்குகளை தாமதப்படுத்துகின்றனர். தாமதப்படுத்தும் நீதி மறுக்கப்படும் நீதிக்கு சமமாகும் என உச்ச நீதிமன்றம் பல முறை கண்டனக்குரல் எழுப்பியும் முஸ்லீம்களாகிய நமது சகோதரர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான பிணை கூட மறுக்கப்படுகிறது. நாடறிந்த குற்றவாளியாகிய பாசிச சங்பரிவார கும்பல்கள் குற்றமற்றவர்கள் என உலாவுகின்றனர்.சட்ட மன்றத்திலேயே முதலமைச்சர் ஜெயலலிதாவால் குற்றம் செய்துள்ளார் என பிரகடனப்படுத்தப்பட்டும் கூட காஞ்சி சங்கராச்சாரியார் என்ற கொலைக் குற்றவாளி பிணையில் விடப்பட்டுள்ளார் ஆனால் இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்த பலர் நீண்ட காலமாக பிணைதராமல் கொடிய சிறையினுள் அடைத்து வைத்திருக்கும் மாபெரும் அநீதி நம் தமிழகத்தின் தான் இந்த அநீதிக்கு எதிராக தமிழ் இனம் ஒன்று திரள்வது காலத்தின் கட்டாயமாகும்.

ராஜிவ் காந்தி படுகொலையின் மூல காரன கர்த்தாக்களான "சாமி" வகையராக்கள் சுதந்திரமாக உலா வருகையில் ஏதுமறியாத அப்பாவிகள் தடா சட்டத்தின் கீழ் பெறப்பட்ட வாக்குமூலங்கள் சாட்சிகளின் அடிப்படையில் இன்று தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளனர். ராஜிவ்கொலை பயங்கரவாத நடவடிக்கை அல்ல, தடா சட்டத்தின் கீழ் வழக்கு தொடர முடியாது என்று உச்சநீதிமன்றம் ஏற்கனவே கூறியுள்ளது; தடா சட்டமும் காலாவதியாகிவிட்டது இன்னும் ஏன் இந்த அப்பாவிகளை துர்க்கு தண்டனை கைதிகளாக அடைத்து வைத்துள்ளனர்? இது மனித உரிமை மீறல் இல்லையா? இன்னும் இந்த வழக்கில் மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தோழர் ரவிச்சந்திரன் உட்பட 4 பேர் ஆயுள் தண்டனை கைதிகளாக 20 ஆன்டுகளை தாண்டியும் அடைபட்டுள்ளனர். ஒரு கைதி எட்டு ஆன்டுகளுக்கு மேல் சிறையில் இருப்பது என்பது அனைத்து மனித உரிமை நெறிமுறைகளுக்கும் எதிரானது என்று மனித உரிமை ஆர்வளர் திரு. வி.ஆர். கிருஷ்னய்யர் என்பவர் கூறியுள்ளார்.

நமது தேசப்பிதா அன்னல் மகாத்மா காந்தி அவர்களை கொன்ற கோபால் கோட்சே என்பவன் 16 ஆன்டுகளில் விடுதலை செய்யப்பட்டான், இவ்வளவுக்கும் கோபால் கோட்சே மகாத்மா காந்தியின் படுகொலையில் நேரடியாக தொடர்புள்ளவன் என்று குற்றம் சாட்டப்பட்டு அது நிருபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டவன். ஆனால் தமிழகத்தில் மட்டும் எந்த வித நேரடி குற்றச்சாட்டுகக்களும் இன்றி சந்தர்ப்ப சாட்சிகளின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டு விசாரனை கைதிகளாகவும், தண்டனை கைதிகளாகவும் 20 ஆன்டுகளை தாண்டியும் சிறைக் கொட்டடிகளில் எமது தமிழ் இனத்தை சேர்ந்த தோழர்கள் பலர் கரையே தெறியாது வாடி வருகின்றனர். தேசப்பிதாவை கொன்ற கொடியவர்கள் எல்லாம் விடுதலையாகும்போது எமது இனச்சொந்தங்களை மட்டும் இந்த அரசு வஞ்சப்பது ஏனோ? 

சட்டம் அனைவருக்கும் சமம் என்ற கோட்பாட்டினை கொண்ட இந்திய திருநாட்டில் சங்கராச்சாரிகளுக்கும், அம்பானி வகையாராக்களுக்கும் ஒரு நீதி சிறுபான்மையினருக்கும் ஒடுக்கப்பட்ட தமிழ் சமூகத்திற்கு ஒரு நீதி!! என்ன ஒரு அவலம்?

பாதிக்கப்பட்டு கொடுஞ்சிறைகளில் அடைபட்டு கிடக்கும் இம்மக்களை பற்றி நாம் அறிந்து கொள்ளாமலோ, அறிந்தும் அறியாமலோ, இவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை மறுக்கவோ , மறைக்கவோ செய்து அல்லது கண்டும் காணாதது போலவோ இருந்து விடலாம். அறிந்து கொல்லுங்கள் வரலாறு நமது மனசாட்சியை விட மிக நேர்மையாக இயங்குகிறது

வரும் ஆகஸ்ட் 31 அன்று தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கூடும் மாநாட்டில் நம் தமிழ் சமூக அமைப்புகளின் தலைவர்கள், மனித அரிமை ஆர்வளர்கள், ஆன்றோர்கள், சான்றோர்கள் என அனைத்து தரப்பினரும் பங்கேற்க உள்ளார்கள் இச்சமூக சங்கமிப்பில் நீங்களும் ஒரு அங்கமாய் நின்று இழைக்கப்பட்ட அநீதிக்கெதிராய குரல் கொடுங்கள், ஜாதி , மத வேறுபாடின்றி உங்களை அழைக்கிறோம், அனைத்து தரப்பு மக்களுக்கான உரிமைப்போர் இது, நமது சக தோழர்களின் அடிப்படை வாழ்வாதாரம் கேட்டு நடக்கும் போராட்டம் இது, சமூக விடியலுக்கான அழைப்பு இது. வாருங்கள் தோழர்களே, தோழ் சேர்ப்போம் மறுக்கப்படும் உரிமைகளை வென்றெடுப்போம்!!

ஆகஸ்ட் 31 - சென்னை மன்னடியில் சங்கமிப்போம், வெஞ்சிறைகளில் வேதனைகளோடு வாடும் நம் இனத்தை மீட்க போராடுவோம் , வாருங்கள் அநீதிக்கெதிரான இந்த களமாடலில் பங்கெடுங்கள் !! பதிவு செய்யுங்கள் உங்களை வரலாற்றின் பக்கங்களில் நீதிக்காக போராடியோர் என்று!!

அழையுங்கள் இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம்: 9944112879 / 7871294143 / 9488159091 / 9944713816

No comments: